Wednesday, June 3, 2015

ஆவியுயிர்ப்பு(Transpiration)

தாவரங்களின் காற்றுக்குரிய பகுதிகளில் இருந்து நீர் ஆவிநிலையில் வெளியேறுதல/ இழக்கப்படல் ஆவியுயிர்ப்பு எனப்படும்.
இது மூன்று வகைப்படும்.
  1. இலைவாய் ஆவியுயிர்ப்பு
  2. புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு.
  3. பட்டைவாய் ஆவியுர்ப்பு.

இலைவாய் ஆவியுயிர்ப்பு
இது மொத்த ஆவியுர்ப்பில் அதிகளவில் நடைபெறும். (80-90%)
இவ் ஆவியுயிர்ப்பு இலைகளிலுள்ள இலைவாய்களினூடாகவே அதிகளவில் நிகழ்கின்றது. இதனால் இது இலைவாய் ஆவியுயிர்ப்பு எனப்படும்.

புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு.
இது மொத்த ஆவியுர்ப்பில் 10-20% நிகழும்.
இவ் ஆவியுயிர்ப்பு தாவரத்தின் பூக்கள், காய்கள் போன்றவற்றின் புறத்தோலினூடாக நீர் ஆவி நிலையில் வெளியேறுதல் இது புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு எனப்படும்.
வரள்நிலத் தாவரங்களில் தண்டு நன்கு தடித்திருப்பதனால் இவ் ஆவியுயிர்ப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்படும்.

பட்டைவாய் ஆவியுர்ப்பு
இவ் ஆவியுயிர்ப்பு தடித்த வைரம் செறிந்த தாவரப்பகுதியில் உள்ள பட்டைவாய்களினூடாக நீர் ஆவியாக இழக்கப்படல் பட்டைவாய் ஆவியுர்ப்பு எனப்படும்.
இது புறக்கத்தக்கது.



                           இருவித்திலைத் தாவர இலையின் குறுக்கு வெட்டுமுகம்

Note:- தாவர இலைகளில் இருந்து அதிகளவான நீர் அவியாக வெளியேறு கின்றது.

தாவரங்களின் நிலவுகைக்கு ஆவியுர்ப்பு பங்களிப்புச் செய்யும் முறையைக் கண்டறிதல்
வாடிய நிலையிலுள்ள தாவரத்திற்கு நீர் ஊற்றும்போது அது மீண்டும் பழைய நிலையை அடைகிறது என்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். எனவே தாவரங்கள் வாடுவதற்குக் காரணம் நீர்ப்பற்றாக்குறையே காரணமாகும்.

தாவரங்களில் நீர்ப்பற்றாக்குறை எவ்வாறு ஏற்படுகின்றது எனக்காட்டல்
ஒரு சட்டித்தாவரத்தின் ஒரு சிறு கிளையை பொலித்தீன் உறையினால் மூடிக்கட்டி சில மணி  நேரத்தின் பின்பு அவதானித்தபோது அப் பொலித்தீன் உறையின் உட்புறத்தில் நீர்த்துளிகள் படிந்து காணப்படும். அந்நீர்த்துளிகள் நீரற்ற செப்புசல்பேற்றை நீலநிறமாக மாற்றும் இதிலிருந்து தாவரங்களி லிருந்து நீர் வெளியேறுகின்றது என முடிவு செய்யலாம். எனினும் இந்நீர் வெளியேற்றம் கண்களுக்குப் புலப்படமாட்டாது. எனவே நீரானது ஆவி நிலையில் வெளியேறியுள்ளது. அந்நீர் குளிர்ச்சியடைந்து பொலித்தீன் உறையின் உட்சுவரில் நீர்த்துளிகளாகப் படியும்.

No comments:

Post a Comment