Wednesday, June 3, 2015

சாற்றேற்றம்


கனியுப்புக்கள் கரைந்துள்ள நீர் தாவரவேர்களிலிருந்து உயரமான பகுதியை நோக்கி எடுத்துச் செல்லப்படலே சாற்றேற்றம் எனப்படும்.
பொதுவாக தாவரவேர்களிலிருந்து இலைகள் வரை காழினூடாக நீரும் அதில் கரைந்துள்ள பதார்த்தங்களும் செல்லும். காழினூடாக இந்நீர் தொடர்ச்சியாக அறுபடாது, மேல் நோக்கிச் செல்லும். இந்நீர் நிரலில் வளிக் குமிழிகள் காணப்படுவதில்லை. நீர்நிரல் தொடர்ச்சியாகக் காணப்படுவதற்கு இரு காரணங்கள் உள்ளன.
  1. பிணைவு விசை
  2. ஒட்டற்பண்பு விசை
இது போன்றே ஆவியுயிர்ப்பின் மூலம் தாவர இலைகளிலிருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் இலைகளிலிருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் இலையின் இழுவை காரணமாக காழினூடாக நீர் மேலேறும். இது ஆவியுர்ப்பு இழுவிசை எனப்படும்.
மேலும் தாவரங்களின் காழ்கலன்களினூடாக நீரும் அதிற் கரைந்துள்ள கனியுப்புக்களும் மேல்நோக்கி ஏறுவதற்கு வேரினால் தள்ளுகை பிரயோகிக்கப்படும். இது வேரமுக்கம் எனப்படும்.
வேரமுக்கம் மூலமாக தாவரங்களில் நீரைக்கொண்டு செல்லக்கூடிய உச்ச உயரம் 18 மீற்றர் ஆகும். எனினும் உயரமான தாவரங்களின் பகுதிகளிற்கு பிரதானமாக ஆவியுர்ப்பு இழுவிசை மூலமே நீர் எடுத்துச் செல்லப்படுகின்றது. இது தாவரங்களில் நீரைக்கொண்டு செல்லக்கூடிய உச்ச உயரம் 50 - 60 மீற்றர் ஆகும்.
இவை தவிர பூண்டுத்தாவரங்களில் (புற்களில்) நீரைக்கொண்டு செல்லலில்  மயிர்த்துளை ஏற்றம் எனும் இழுவிசையும் தொழிற்படுகின்றது. எனினும் அது 10 - 15 சென்ரி மீற்றர் வரையுமே தொழிற்படக்கூடியது.

No comments:

Post a Comment