நீர் ஆவிநிலையில் தாவரங்களிலிருந்து வெளியேறுதலே ஆவியுயிர்ப்பு ஆகும்.எனவே ஆவியாதலைப் பாதிக்கும் எல்லாக் காரணிகளும் ஆவியுர்ப்பையும் பாதிக்கும்.
ஆவியுர்ப்பில் பங்களிப்புச் செய்யும் சூழற்காரணிகள்
1. சூழல் வெப்பநிலை
2. வளிமண்டல ஈரப்பதன்
3. காற்றின் வேகம்
4. ஒளிச்செறிவு
5. மண்ணீரின் அளவு
சூழல் வெப்பநிலை
வெப்பநிலை அதிகரிக்கும் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
வளிமண்டல ஈரப்பதன்
வளிமண்டல ஈரப்பதன், வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவில் தங்கியுள்ளது. எனவே வளியிலுள்ள நீராவியினளவு குறையும் போது வளிமண்டல ஈரப்பதன் குறையும். இதனால் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
காற்றின் வேகம்
காற்றின் மூலமாக இலையைச் சூழ்ந்து காணப்படும் நீராவி எடுத்துச் செல்லப்படும். எனவே காற்றின் வேகம் அதிகரிக்கும் போது ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
ஒளிச்செறிவு
ஒளியுள்ளபோது இலைவாய்கள் திறந்திருக்கும். ஆகவே வெப்பநிலையும் அதிகமாகக் காணப்படும் எனவே ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
மண்ணீரின் அளவு
கிடைக்கத்தக்க மண்ணீரின் அளவு அதிகரிக்கும் போது தாவரங்களில் அகத்துறிஞசப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும். இதனால் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment