ஆவியுயிர்ப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை சோதிப்பதற்கு கனொங்கின் உறிஞ்சன் மானி பயன்படுத்தப்படுகின்றது.
உறிஞ்சன்மானியையும் தாவரத்துடன் சேர்ந்த கிளையையும் நீரினுள் அமிழ்த்தி நீரினுள் வைத்து கிளையை வெட்டி படத்திற்காட்டியவாறு பொருத்திக் கொள்ள வேண்டும். தண்டினுள் வளிக் குமிழிகள் செல்வதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு நீரினுள் வைத்து வெட்டப்படும். பின்னர் கிளை பொருத்தப்பட்ட பகுதிகள் வசலீன் கொண்டு வளியிறுக்கம் செய்யப்படும்.
மேலும் உறிஞ்சன்மானியின் மயிர்த்துளைக் குழாயை நுனியை சற்று உயர்த்தித் தாழ்த்துவதன் மூலம் வளிக்குமிழியொன்றை அதன் திறந்த முனையினூடாக உட்செல்ல அனுமதிக்கப்படும்.
இலைகளிலிருந்து ஆவியுயிர்ப்புமூலம் நீர் வெளியேறும்போது வளிக்குமிழிää கிளை பொருத்தப்பட்டு உள்ள திசையை நோக்கி அசையும்ää குழாயில் அளவிடை குறிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் வளிக்குமிழி அசைந்த தூரத்தை அளந்து கொள்க அத்துடன் அதற்கு எடுத்த நேரத்தை அளந்து கொள்க.
இதிலிருந்து பல்வேறு சூழல் நிலமைகளில் வைத்து ஆவியுயிர்ப்பு வீதத்தை துணிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment