மேலே படத்தில் காட்டியவாறு பச்சை நிறமுள்ள இலைகளைக் கொண்ட சட்டித் தாவரத்தை 48 மணித்தியாலம் இருளில் வைத்த பின் சூரிய ஒளிபடக் கூடியவாறு அத் தாவரம் 4-5 மணித்தியாலத்திற்கு வைக்கப்பட்டது. பின்னர் தொகுதி A இனுள் காபனீரொட்சைட்டை உறுஞ்சுவதற்கு KOH கரைசலும் தொகுதி B இனுள் நீரும் இடப்பட்டது.
தொகுதி A, தொகுதி B தாவரத்திலிருந்து சில இலைகள் பறிக்கப்பட்டு பச்சையத்தை நீக்கும் படிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. (கொதிநீரில் அவித்து பின் மதுசாரத்தில் அவித்தல்)
பின் மாப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது தொகுதி B இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டின. தொகுதி A இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டவில்லை.
எனவே இலைகளில் உணவு உற்பத்திக்கு/ ஒளித்தொகுப்புக்கு காபனீரொட்சைட்டு அவசியம் என்ற முடிவுக்கு வரலாம்
No comments:
Post a Comment