Wednesday, June 3, 2015

ஒளித்தொகுப்புக்கு பச்சையம் அவசியமெனக்காட்டல்

பன்னிறக் குறோட்டன் இலை/ பச்சையமற்ற நிறமுள்ள இலைகளைக் கொண்ட சட்டித் தாவரத்தை 48 மணித்தியாலம் இருளில் வைத்த பின் சூரிய ஒளிபடக் கூடியவாறு அத் தாவரம் 4-5 மணித்தியாலத்திற்கு வைக்கப்பட்டது.
அத் தாவரத்திலிருந்து சில இலைகள் பறிக்கப்பட்டு பச்சையத்தை நீக்கும் படிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. (கொதிநீரில் அவித்து பின் மதுசாரத்தில்  அவித்தல்)
பின் மாப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இலையில் பச்சையமுள்ள பகுதிகள்  I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டின. பச்சையமற்ற பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டவில்லை.
எனவே இலைகளில் உணவு உற்பத்திக்கு பச்சையம் அவசியம் என்ற முடிவுக்கு வரலாம்.

No comments:

Post a Comment