பச்சை நிறமுள்ள இலைகளைக் கொண்ட சட்டித் தாவரத்தை 48 மணித்தியாலம் இருளில் வைத்தது பின்னர் அத்தாவரத்தின் இலையொன்றை தெரிவு செய்து அதன் ஒரு பகுதியைக் கறுப்புத் தாளினால் நன்கு மூடுக. அப்பகுதி மீது வழுக்கிகளை இருபுறமும் வைத்து இறப்பர்ப்பட்டியினால் கவனமாகச் சுற்றிக் கட்டுக. பின் அவ்விலையினை 4-5 மணித்தியாலத்திற்கு சூரிய ஒளிபடக் கூடியவாறு வைக்க
இலை பறிக்கப்பட்டு பச்சையத்தை நீக்கும் படிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. (கொதிநீரில் அவித்து பின் மதுசாரத்தில் அவித்தல்)
பின் மாப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது ஒளிபடவிடப்பட்ட இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டின. ஒளிபடவிடப்படாத இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டவில்லை.
எனவே இலைகளில் உணவு உற்பத்திக்கு சூரிய ஒளி அவசியம் என்ற முடிவுக்கு வரலாம்
No comments:
Post a Comment