தாவரத்தின் வேரினால் அகத்துறிஞ்சப்படும் நீர், கனியுப்புக்கள் காழ் இழையத்தினூடாக தாவரத்தின் ஏனைய பகுதிகள் முழுவதற்கும் கடத்தப்படுகின்றது.
இக்கடத்தல்/ கொண்டு செல்லல் இரு வகைப்படும்.
1. உயிர்ப்பான கடத்தல்
2. உயிர்ப்பற்ற கடத்தல்
உயிர்ப்பான கடத்தல்(Active Transport)
அனுசேபத்தின் போது உருவாக்கப்படும் ATP சக்தியைப்பயன்படுத்தி பதார்த்தப்பரிமாற்றம் நிகழுமாயின் அது உயிர்ப்பான கடத்தல் ஆகும்
Eg:- தாவரங்களில் கனியுப்பு அயன்கள் உயிர்ப்பான கடத்தல் மூலமே அகத்துறிஞ்சப்படுகின்றன.
உயிர்ப்பற்ற கடத்தல்(Passive Transport)
அனுசேப சக்தி விரயமின்றி / ATP சக்தியைப்பயன்படுத்தாது பதார்த்தப் பரிமாற்றம் நிகழுமாயின் அது உயிர்ப்பற்ற கடத்தல் ஆகும்
இது பின்வரும் முறைகளில் நிகழும்
1. பரவல் (Diffusion)
2. பிரசாரணம் (Osmosis)
3. திணிவுப்பாய்ச்சல் (Mass flow)
4. உட்கொள்கை (Inhibition)
5. ஆவியாதல் (Evaporation)
No comments:
Post a Comment