ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள சூரியனுடன் பெரிய வால்வெள்ளி/ விண்கல் மோதியதன் விளைவாகவே இக் கோள்மண்டலங்கள் உருவாகியதாகவும் அதில் ஒன்று தான் புவியெனக் கூறப்படுகிறது.
புவி உருவாகிய வேளையில் உயர் வெப்பநிலையும் N2, H2, CO2, H2O, H2S, NH3 ஆகிய எளிய வாயு மூலக்கூறுகளைக் கொண்ட வளிமண்டலம் காணப்பட்டதெனவும் பின்பு படிப்படியாக புவி குளிர்ச்சியடைந்து நீராவி ஒடுங்கி மழையாகப் பெய்ததன் மூலம் அந்நீர் புவியின் பள்ளமான பகுதிகளில் தேங்கியதன் விளைவாக சமூத்திரங்கள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன்போது வளிமண்டலத்தில் காணப்பட்ட இவ்வாயுக்கள் மழைநீரில் கரைந்து அவை சமுத்திரத்தின் ஆழமான பகுதிகளில் படிந்து “அழுக்குப்படலம்(Concervate)” உருவாக்கப்பட்டது.
அத்துடன் மழைபெய்கின்ற வேளையில் ஏற்பட்ட மின்னலினால்/ மின்னிறக்கங்கள் காரணமாக இவ் அழுக்குப்படலத்தில் மாற்றம் ஏற்பட்டு அவை சேதனச்சேர்வைகளை உருவாக்கி அதிலிருந்து முதலாவது உயிரினம் தோன்றியதென நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment